மன்னன் ஒருவன் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது அரண்மனையை பொதுமக்களுக்கு திறந்துவிட்டேன் மக்கள் விரும்பிய பொருளை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தான்.
விலையுயர்ந்த பர்னீச்சர்களையும் தின்பண்டங்களையும் பழங்களையும் துணிகளையும் அணிகலன்களையும் ஆளுக்கொன்றாக எடுத்துக்கொண்டு மன்னனை வணங்கி விடைபெற்றனர்.
எல்லோரும் சென்ற பிறகு ஒரு சிறுவன் எதையும் எடுக்காமல் அமைதியாய் நின்றுகொண்டிருந்தான். மன்னன் அவனைப் பார்த்து கேட்டார், நீ எதுவும் எடுக்கலயா என்பதாக சிறுவன் ஓடிச் சென்று மன்னனை கட்டியணைத்துக் கொண்டு எனக்கு நீங்க தான் வேண்டும் மன்னா என்றதும் மன்னன் நெகிழ்ந்துபோனார்.
அந்த சிறுவனை தனது மகனாகவே தத்தெடுத்து வளர்த்தாராம்.