wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26

போதகர் ஒருவர், ஒரு ஓய்வு நாள் காலை ஆராதனையின் செய்தி வேளையில் பிரசங்க பீடத்திற்கு ஷேவிங் செட் கொண்டுவந்தார்.

'செய்திக்கு நேராய் கடந்து சொல்லுவோம்' என்று சொல்லி ஜெபித்துவிட்டு, கண்ணாடியை முன்னே வைத்து பொறுமையாக தன் முகத்தை ஷேவிங் செய்தார்.

போதகர் தன் செய்திக்கு செயல்வடிவ துவக்கம் தருகிறார் என்று எண்ணிய மக்கள் அமைதியாக இருந்தனர்.

சிலரோ, போதகர் பரிசுத்த பீடத்தை அசுத்தம் செய்துவிட்டார் என்று கோபத்தில் குமுறிக்கொண்டிருந்தார்கள்.

போதகரோ பொறுமையாக ஷேவிங் செய்து முடிந்தபின்பு ஒன்றும் பேசாமல் ஜெபம் செய்து ஆராதனையை முடித்துவிட்டார்.

அதிர்ச்சியடைந்த விசுவாசிகள் போதகரின் இச்செயலை தொலைபேசி, முகநூல், வாட்ஸ்ஆப், குறுஞ்செய்தி வழியாக நண்பர்கள், உறவினர்கள் போன்றோருக்கு உடனடியாகப் பரப்பினார்கள்.

செய்தி காட்டு தீ போல் உலகம் எங்கும் வேகமாகப் பரவியது.

விளக்கம் கேட்டு பேராயரிடமிருந்து நோட்டீஸ் வந்தது.

அடுத்த வாரம் போதகர் மீண்டும் பலிபீடம் ஏறினார்.

சென்ற வாரம் நான் செய்ததை யார் யாரெல்லாம், எத்தனை பேரிடம் சொன்னீர்கள் என்று கேட்டார்.

மக்கள் தங்கள் தலைகளைத் தொங்க போட்டுக்கொண்டு அமைதியாக இருந்தனர்.

மீண்டும் போதகர், சென்றவாரத்துக்கு முந்தையவாரம், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார். இதை எங்கும் பறைச்சாற்றுங்கள் என்று மிகுந்த பாரத்துடன் சொன்னேனே. அதை எத்தனைப் பேருக்கு சொன்னீர்கள்...? என்று கண்ணீருடன் கேட்டார்....

துர்செய்தியை மிகுந்த ஆர்வத்துடன் மிக வேகமாகப் பரப்பிய விசுவாச அன்பர்கள், அவர் சாென்ன நற்செய்தியை மிகுந்த ஆர்வத்துடன் அனைவரிடமும் பாரத்துடன், எல்லோருக்கும் சொல்லுங்கள் என்று பல ஆண்டுகளாக சொல்லி வரும் சுவிசேஷ செய்தியை ஒருவருக்கு கூட சொல்லாதது வருத்தமளிக்கிறது, இதுதான் இன்றைய நிலமை.

பொய் பல ஆயிரம் மைல்களுக்கு பயணித்த பின்புதான் சத்தியம் செருப்பு அணியவே துவங்குமாம்.

தொடர்ந்து துர்செய்தியை துரிதமாக பரப்புவதை விட நற்செய்தியை(சுவிசேஷத்தை) துரிதமாக பரப்ப விழைவாேம்.