wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26

"மிஷனரியாக சீனாவுக்குச் சென்ற மகன், அங்கேயே மறித்து விட்டான்" என்ற செய்தி, மிகவும் வயதான தகப்பனாருக்கு எட்டியது.

அந்த துக்ககரமான மரணச்செய்தியை தன் அந்திக் காலத்தில் அவர் எப்படித் தாங்கிக் கொள்வார் என்று எல்லோரும் நினைத்தனர்.

அவர் சொன்னார், "என் கண்களில் கண்ணீர் நிறைந்திருக்கிறது. ஆனால் என் உள்ளமோ தேவனுக்காய் என் மகன் விதைக்கப்பட்டிருக்கிறான் என்று மகிழ்கிறது" என்றார்.

ஆம், தேவன் உங்கள் உள்ளத்தில் தந்தருளும் தெய்வீக மகிழ்ச்சியும், சமாதானமும் எல்லா உலக சலசலப்புகளையும் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

பாருங்கள், யோபு அத்தனை இழப்புகள் மத்தியிலும், தன் அருமை குழந்தைகளை இழந்த போதிலும், மரண நேரத்திலும் "கர்த்தர் கொடுத்தார்; கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்" என்று அமைதியாகச் சொன்னார்! (யோபு 1:21)

வாழ்க்கையில் துயரங்கள் வரும் போது கிறிஸ்துவின் வாக்குத்தத்தத்தை நினைவு கூறுங்கள்; சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக. (யோவான் 14:27)

தேவஜனமே கலங்காதீர்கள்! தேவன் சொன்ன வாக்குத்தத்தத்தை வைத்து ஜெபியுங்கள்! கர்த்தர்மேல் விசுவாசமாயிருங்கள்!

அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். [ பிலிப்பியர் 4:27 ]. ஆமென்..