- Song Book:
Spiritual Songs of Joy
ஆவிக்குரிய சந்தோஷக் கீதங்கள்
நான் அநாதை என்று அழுதேன்
நீ அநாதை இல்லை எந்தன்
சொந்தம் என்றீர் ஐயா
அநாதை என்று அழுதேன்
காணாமல் போன ஆடாய் அலைந்தேன்
கர்த்தாவே உந்தன் கண்கள் கண்டது
மார்போடு அணைத்தீர் மந்தையில் சேர்த்தீர்
மகிமை செலுத்திடுவேன் - நான் அநாதை
மாராவின் கண்ணீர் கொண்ட வாழ்க்கை - அது
மதுரமாய் மாறாதென்று மலைத்தேன்
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினீர்
மகிமை செலுத்திடுவேன் நான் - நான் அநாதை
கண்ணீரின் பள்ளத்தாக்கில் கிடந்தேன்
நான் கதறி முறையிட்டு அழுதேன்
கருத்தாய் விசாரித்தீர் கண்ணீரை மாற்றினீர்
மகிமை செலுத்திடுவேன் - நான் - நான் அநாதை