- Song Book:
Spiritual Songs of Joy
ஆவிக்குரிய சந்தோஷக் கீதங்கள்
இயேசுவோடு சேர்ந்திருப்பதென்ன பாக்கியம்
இயேசுவிற்காய் ஜீவப்பதோர் என்ன ஆனந்தம்
ஆசை என்றும் எந்தனகம் பெருகின்றதே
ஆனந்தமாய் என்றும் வாழ வாஞ்சித்திடுதே
– இயேசு
போக்கினார் என் பாவமெல்லாம் தாம் மரித்ததால்
நீக்கினார் என் சாபபெமல்லாம் தாம் சுமந்தததால்
எண்ணவே உம் சிநேகம் உள்ளில் பெருகிடுதே
மன்னா உம் கூட வாழ என்று கூடுமோ
– இயேசு
மாட்சிமிகும் நாட்டிலே நான் வாசம் செய்திட
மாசிறந்த வீடெனக்காய் ஆயத்தமாகக்
கைகளால் கட்டிடாததோர் நித்திய இராஜ்யமே
கண்டிடவே ஆசையோடு காத்திருக்குதே
– இயேசு
அன்று தீரும் எந்தன் கஷ்டம் லோக மண்ணிலே
அன்று நீங்கும் எந்தன் துக்கம் யாவும் நிச்சயம்
அன்று சுத்தர் நின்று ஒன்றாய் பாடி ஆர்க்கவே
என்று அந்நாள் வந்து சேரும் எந்தன் இயேசுவே
– இயேசு
நல்லவரே வல்லவரே பொன்னு காந்தனே
அல்லல் தீர்க்க என்று வாறீர் ஆத்ம நேசரே
எல்லையில்லா ஆனந்தமாய் வீணைகளேந்தி
அல்லேலூயா கானம் பாடி வானில் வாழ்ந்திட
– இயேசு