எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே
உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே
தேற்றும் தெய்வமே துணையாளரே
உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
வறண்ட நிலம் தவிப்பது போல்
என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையா
எனது ஏக்கமே எனது பிரியமே
எனது பாசமே எனது ஆசையே
காணச் செய்யும் கருணை நேசரே
உம்மையே நம்பியுள்ளேன்
நீர் வரும்பும் உம் நல்ல பாதைகளை
தினந்தோறும் காட்ட வேண்டும் திவ்ய நாதரே
அன்பின் சிகரமே ஆருயிரே
அணைக்கும் தெய்வமே ஆறுதலே