- Song Book:
Jebathotta Jeyageethangal
S.J.பெர்க்மான்ஸ்
உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்
உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன்
நீர் போதுமே என் நேசரே
உம்மால் தானே மேன்மை வந்தது
கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையே
உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே - என்
வெற்றி தந்ததால் பெரியவனானேன் - நீர்
மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது
வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன்
நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர்
பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால்
பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் - நான்
என்றும் நிலைத்திருக்கும் ஆசீர் தருகின்றீர்
உம் சமுகத்தின் மகிழ்ச்சியினால் திருப்தியாக்குகிறீர்