நீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா
எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்
உயிருள்ள நாளெல்லாம்
காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர்
நான் போகும் பாதைகளை அறிந்தவரே
உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக்கொண்டேன்
காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே - என்னை
அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே
இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
என் கண்கள்தானே அந்நாளில் காணுமே
என் உள்ளம் ஏங்குதையா